அமுதகலசம்
Sunday, 22 September 2013
Knowing Yourself: Free Tamil Books, Tamil PDF books collection for d...
Knowing Yourself: Free Tamil Books, Tamil PDF books collection for d...: Here is a collection of popular Tamil eBooks, in PDF format, handpicked by TamilCube for your reading pleasure! If you want to ...
Knowing Yourself: Audio Thirukkural - All the 1330 couplets (Kural) ...
Knowing Yourself: Audio Thirukkural - All the 1330 couplets (Kural) ...: MP3 AUDIO Full Download Link : http://db.oruwebsite.com/Tamil/index.php?dir=26%20-%20Thirukural/ KURAL 1 TO 10.mp3 KURAL 11 TO ...
Tuesday, 10 September 2013
VANNATHULIGAL: வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கும் பூமிக்கு ஒப்பான முதல...
VANNATHULIGAL: வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கும் பூமிக்கு ஒப்பான முதல...: பூமியைப் போன்றே உயிர்கள் வாழ ஏற்றதும் வேற்றுக்கிரக வாசிகள் வசிக்கலாம் என நம்பப் படுவதுமான ஏலியன் கிரகமொன்றை அடுத்த வருடம் 2013 இல் தெளிவ...
Saturday, 7 September 2013
திருவள்ளுவர் ஞானம்
திருவள்ளுவர் ஞானம்
காப்பு
அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற
அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1
கட்டளைக் கலித்துறை
அன்னை யெனுங்கர்ப்ப
மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன
அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1
அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய
மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2
தரவு கொச்சகம்
அண்டரண்ட
வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற
வாறுதனை யேயழித்தேன்
விண்டரக
சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3
வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ
தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4
கட்டளைக் கலித்துறை
வீடானமூலச் சுழிநாத
வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த
பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5
எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6
எந்நா ளிருந்தென்ன
முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ
துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7
யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித
மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய
முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய
இனியில்லையே. 8
நேரிசை வெண்பா
இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ
மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9
ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச
முண். 10
சுழியறியார்க் கென்ன
சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன
எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11
வேத
மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12
முதலிருந்த
ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம
லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13
காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14
கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15
என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன
காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16
உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன
மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய
மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17
அஞ்சுபஞ்ச
பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ
தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய
லாமே விதி. 18
எண்சாணாந் தேக
மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக
மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19
(முடிந்தது)
Subscribe to:
Posts (Atom)
