புரைஅற்ற
பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே. – (திருமந்திரம் – 134)
விளக்கம்:
உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம்
குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல,
அலையற்ற மனத்தில்,
குருவாகிய ஆசிரியர் சொல்லும்
உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம்.
உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து
விடலாம்.
குழப்பம்
இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள்
தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள்.
(புரை
– குற்றம், திரை
– அலை, ஆரியன்
– குரு, ஆசிரியர், உரையற்று
– பேச்சற்று, சத்து
– மெய்ப்பொருள்)
No comments:
Post a Comment