அமுதகலசம்

அமுதகலசம்

Wednesday, 12 February 2014

திருமந்திரம் ஞானம் 4

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
 அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
 ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி

 இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. – (திருமந்திரம் – 133)

விளக்கம்: ஒருமையுள் ஆமை போல!
சிவபெருமான் பக்தர்களாகிய நம் பெருமைகளையும், சிறுமைகளையும் அறிந்து கொள்வதில் வல்லவர். பெருமை உடையர்க்கு எளிதாகக் காட்சி தருகிறார், சிறுமை உடையவர்க்கு அரிதாகக் காட்சி தருகிறார். உடல் உறுப்புக்களை  தனது ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளும் ஆமை போல, ஐந்து புலன்களையும் உள்ளடக்கி இருப்பவர்கள், இந்த உலகிலும், மறு உலகிலும் இன்பம் அடைந்து, குற்றமற்றவர்களாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment