அமுதகலசம்

அமுதகலசம்

Wednesday, 12 February 2014

திருமந்திரம் ஞானம்.

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
 உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
 அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்

 செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. – (திருமந்திரம் – 136)

விளக்கம்: நாமெல்லாம் உப்பு பொம்மைகள்

கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம் 

No comments:

Post a Comment