அமுதகலசம்

அமுதகலசம்

Wednesday, 12 February 2014

திருமந்திரம் ஞானம் 5

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
 பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
 பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
 பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. – (திருமந்திரம் – 132)

விளக்கம்: சிவயோகியர் அடையும் பேறு

 சிவயோகியர் சிவ உலகை விட்டு நீங்காத மன நிலையை அடைவார்கள். அதனால் அவர்களுக்கு பிறவாமை என்கிற பெரும் பயன் வந்து சேரும். அந்த யோகியர் சிவபெருமான் திருக்கூத்தாடும் அம்பலத்தை விட்டு பிரியாத பெரும்பேறு அடைவார்கள். சிவ உலகில் திளைத்திருக்கும் அவர்கள் உலக விஷயங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.


No comments:

Post a Comment