மாணிக்கத்
துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. – (திருமந்திரம் – 131)
விளக்கம்:
மாணிக்கத்துள்ளே மரகத சோதி
சுத்தமான தங்கத்தினால் ஆன அம்பலத்தில் உமையம்மையுடன்
சிவபெருமான் ஆடுகிற கூத்து, மாணிக்கம்
போன்ற சிவந்த ஒளியினுள் மரகதம் போன்ற பச்சை ஒளி கலந்தது போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகத மாடம் காணப்படுவது
போலவும் இருக்கிறது. அப்படிப்பட்ட திருக்கூத்தைக் கண்டு வணங்கும் வரத்தை பெற்றவர்கள் சிவ யோகியர்.
சிவனின்
நிறம் செம்மையானதாகவும், சக்தியின்
நிறம் பசுமையாகவும் இருப்பதால், மாணிக்கத்துள்ளே
மரகத சோதியாய் என திருமூலர் பாடியுள்ளார்.
எவ்வாறு
காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. –
(திருமந்திரம் –
130)
விளக்கம்: சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை!
பக்தர்கள் ஒவ்வொருவரும், தமது அறிவின் எல்லைக்கேற்ப தனக்குத் தெரிந்த
முறையில் சிவபெருமானை அணுகுகிறார்கள். அந்தச் சிவபெருமானும் பக்தர்கள் தன்னை எப்படி
அணுகுகிறார்களோ, அந்த
வழியிலேயே அவர்களுக்கு அருள் செய்கிறான். அந்தப் பழமையான சிவன் ஒப்பில்லாத சபையிலே
உமையம்மை காண நடனம் செய்பவன். அந்த நடனத்தின் போது, சிவபெருமான் செவ்வானத்தை விடச் சிவந்த ஒளி
வீசும் மாணிக்கமாகத் திகழ்கிறான்.
சிவனை
அணுகுவதற்கென்று விஷேசமான அறிவெல்லாம் தேவையில்லை. அவரவர் அறிவின் எல்லை அறிந்து,
சிவன் அதற்கேற்றபடி தன்னைக்
காட்டிக் கொள்வான்.
தூங்கிக்கண்
டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. –
(திருமந்திரம் –
129)
விளக்கம்:
அந்த பேரின்ப நிலையை விளக்க முடியாது
யோக நிலையில் உள்ள சித்தர்கள் சிவலோகத்தை தம்முள்ளே
காண்கிறார்கள். அங்கே அவர்கள் தாம் சிவனோடு பொருந்தி இருப்பதை உணர்கிறார்கள். சிவத்தோடு
பொருந்தி இருந்து, பேரின்பன்மான
சிவபோகத்தை அனுபவிக்கிறார்கள். அந்த இன்ப நிலை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அதைச் சொல்லினாலோ எழுத்தினாலே விளக்க முடியாது.
சோம்பர்
இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. –
(திருமந்திரம் –
128)
விளக்கம்:
வேதத்தினாலும் எட்ட முடியாத நிலை
தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கும் சித்தர்களைச்
சோம்பர் என்கிறார் திருமூலர். அவர்கள் சுத்தமான
வெளியிலே பேரின்பத்தை அனுபவித்து, தன்னிலை
மறந்து அங்கேயே கிடப்பார்கள். அந்த பேரின்ப நிலை, வேதத்தினாலும் எட்ட முடியாதது. அந்த பேரின்ப
நிலையில் வேதங்களை எல்லாம் அவர்கள் மறந்து விடுவார்கள். அவர்களுக்குத் தெரிவதெல்லாம்
சிவமாகிய பேரின்பம் மட்டுமே.
சுருதி
என்றால் எழுத்து மூலம் இல்லாமல் வாய் மொழியினால் கற்ற வேதம். வேதங்களுக்கு ஆரம்பத்தில்
எழுத்து உரு கிடையாது, வாய்மொழியாகத்
தான் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான், வேதங்கள் எழுத்து உருவில் பதிவு செய்யப்பட்டன.
இருந்தார்
சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. – (திருமந்திரம் – 127)
விளக்கம்:
எல்லாவற்றிலும் சிவனின் செயலைக் காணலாம்!
No comments:
Post a Comment